News January 23, 2025
“நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடு” போஸ்டரால் பரபரப்பு

குளித்தலை கடம்பவனீஸ்வரர் கோவில் சுற்றி தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு சாலை அமைத்திட வேண்டுமென கடம்பர் கோவில் ஊர் பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் குளித்தலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.
News August 23, 2025
கரூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூர் மாவட்ட கூட்டரங்கில் (25.08.2025) அன்று மாலை 4 மணிக்கு எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து எரிவாயு நுகர்வோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்தார்.
News August 22, 2025
கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <