News January 23, 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு விலை சரிவு 

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கிராம்பு சீசன் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கிராம்பு விலை சரிய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ கிராம்பு 1100 ரூபாய் என்று கடந்த மாதம் விலை இருந்த நிலையில் தற்போது அது 900 ரூபாயாக குறைந்துள்ளது. அடுத்து வரும் மாதங்களில் கிராம்பு விளைச்சல் அதிகளவிற்கு வரும் என்பதால் கிராம்புகளை மேலும் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News

News January 12, 2026

குமரி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

image

குமரி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணிலும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News January 12, 2026

நாகர்கோவிலில் பாலியல் தொழில்; 2 இளம்பெண்கள் மீட்பு

image

நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் தனியார் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள தங்கும் அறையில் பாலியல் தொழில் நடப்பதாக வடசேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நேற்று சோதனை செய்தனர். அதில் 2 இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலியல் தொழில் நடத்தியதாக டெசின், மிதுன் பாபு உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து 2 பெண்களையும் மீட்டனர்.

News January 12, 2026

குமரி: ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் தற்கொலை

image

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே நேற்று முன் தினம் ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மேல்மீடாலத்தை சேர்ந்த என்ஜினீயர் பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா (அ) தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.

error: Content is protected !!