News January 23, 2025

அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு தேவை

image

விருதுநகர் அரசுப் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து, child helpline எண் 1098ஐ பகிர்ந்தனர். இதனையடுத்து, மாணவிகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க, உடனே கைது நடவடிக்கை பாய்ந்தது. இதேபோல் மாற்றம் வர, மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News August 28, 2025

இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

image

கோவை, நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தற்போது கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இரவு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பாதுகாப்புடன் செல்லுங்கள். உங்கள் ஊரில் மழையா?

News August 28, 2025

RSS பிடியில் அதிமுக இருப்பது உறுதியானது: திருமாவளவன்

image

அதிமுகவை RSS வழிநடத்தினால் என்ன தவறு என எல்.முருகன் கூறியது, அதிமுக முழுக்க RSS கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதை காட்டுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியார் வழியில் வந்த அதிமுக தற்போது வீர சாவர்க்கர் வழிவந்தவர்களால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிப்பதாகவும், இது தவறா, தவறில்லையா என்பதை EPS தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 28, 2025

இந்திய விண்வெளி துறையில் அடுத்த மைல்கல்

image

குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு இஸ்ரோ தலைவர் நாராயணன் அடிக்கல் நாட்டினார். இங்கு 90 கோடி ரூபாய் மதிப்பில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பு, உள்கட்டமைப்பு பணிகள் தொடங்கவுள்ளன. இதில் பேசிய நாராயணன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் ஏவப்படும் என்றார். இந்தியாவின் 4வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் அமையவுள்ளது.

error: Content is protected !!