News January 23, 2025

டங்ஸ்டன் சுரங்கம்: கடந்து வந்த பாதை

image

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்ததாக, 2024 நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதனால், பல்லுயிர் பாரம்பரிய தலங்கள் அழிய வாய்ப்புள்ளதாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். TN அரசும் கடந்த டிச.9ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. நேற்று மதுரை மக்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசிய நிலையில், இன்று ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar News

News October 16, 2025

செங்கோட்டையன் தூங்கிவிட்டார்: அண்ணாமலை

image

EPS உடன் முரண்பாட்டில் உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையனும், அண்ணாமலையும் ஒரே விமானத்தில் பயணித்தது பேசுபொருளானது. இந்நிலையில், விமானத்தில் ஏறியதும் செங்கோட்டையன் தூங்கிவிட்டதாகவும் தான் புத்தகம் படித்துக்கொண்டே வந்ததாகவும் கூறிய அவர் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், கடந்த முறை விமானத்தில் செல்கையில் CM-ஐ சந்தித்தபோது, மரியாதை நிமித்தமாக பேசியதாகவும் கூறியுள்ளார்.

News October 16, 2025

கோலி, ரோஹித் ஓய்வு எப்போது? ரவி சாஸ்திரி

image

டெஸ்ட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது போல, அவர்களே (ரோஹித், கோலி) ODI குறித்தும் முடிவு செய்வார்கள் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். ரோஹித் சர்மா, விராட் இருவரும் ஆஸி.,க்கு எதிரான ODI தொடரோடு ஓய்வை அறிவிப்பர் என தகவல் வெளியாகும் நிலையில், ரவி சாஸ்திரி பேசியது பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் ODI-க்கு போதுமான உடற்தகுதி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரோஹித் – கோலி ஆட்டத்தை பார்க்க ரெடியா?

News October 16, 2025

BREAKING: பிரபல தமிழ் நடிகர்கள் வீடுகளில் பதற்றம்

image

நடிகர்கள் கார்த்திக், சத்யராஜ், நாசர், அமீர் ஆகியோரின் வீடுகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். டிஜிபி அலுவலகத்திற்கு வந்த இமெயிலை தொடர்ந்து, அனைவரின் வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால், பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாள்களாகவே, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!