News January 23, 2025
சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே பி.அழகாபுரி கிராமத்தில் இரவு வீட்டில் தனியாக இருந்த சசிகுமார் (23) என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழச்சிவல்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்த வடக்கு இளையாத்தங்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் வெற்றிவேல் (26) என்பவரை திருமயம் போலீசார் கைது செய்து கொலை சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
சிவகங்கை: மத்திய அரசில் 201 காலிப்பணியிடம்

UPSC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Assistant Director (Systems), Enforcement Officer/ Accounts Officer உள்ளிட்ட 201 பதவிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். <
News August 16, 2025
பேச்சுப் போட்டி அறிவிப்பு – ஆட்சியர் தகவல்

பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகள் (6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை) மற்றும் அனைத்து கல்லூரிகளில் பயின்று வரும் மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே, வரும் 21.8.2025 மற்றும் 22.8.2025 மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகக்கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 16, 2025
சிவகங்கை: முதலமைச்சர் கோப்பை முன்பதிவு தேதி நீட்டிப்பு

சிவகங்கையில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இதுவரை மாநில அளவில் 10 லட்சம் வீரர்கள் முன்பதிவு செய்தனர். (https://cmtrophy.sdal.in/https://sdal.tn.gov.i) இதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 16 வரை இருந்தது. தற்போது ஆகஸ்ட் 20 வரை முன்பதிவு செய்யலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.