News January 23, 2025
வீடு தேடி வந்து காப்பாற்றும் உ.பி. போலீஸ்! சல்யூட்

சோஷியல் மீடியா ஆபத்து என பேசப்படும் நிலையில், அதையே பயன்படுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர் உ.பி. போலீசார். ஜன.1 முதல் தற்போது வரை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தற்கொலை போஸ்ட்களை பதிவிட்ட 656 பேரை உடனடியாக தேடிச் சென்று போலீசார் மீட்டுள்ளனர். META நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, தற்கொலை போஸ்ட் பதிவிடுவோரின் விவரங்கள் உடனடியாக உ.பி. போலீஸுக்கு கிடைத்துவிடுமாம். TN போலீஸும் இதை பின்பற்றலாமே..
Similar News
News August 28, 2025
ராகுல் ஜனநாயகத்தின் காவலன்: செல்வப்பெருந்தகை

குஜராத் மாடல் என்றால் அது வளர்ச்சி அல்ல, வாக்கு திருட்டு என ராகுல் கூறியது உண்மையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களின் நம்பிக்கையை பறித்து ஆட்சியைப் பிடிக்கும் பாஜக அரசின் முகமூடியை கிழித்து எறியும் வலிமையான வார்த்தைகளாக இது திகழ்வதாகவும் கூறியுள்ளார். இது மாற்றத்தின் குரல் என்றும், ராகுல் ஜனநாயகத்தின் காவலன் என்று நிரூபித்திருப்பதாகவும் கூறினார்.
News August 28, 2025
இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வராதீங்க

கோவை, நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனிடையே, தற்போது கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கையாக இரவு வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அத்தியாவசிய தேவைக்கு மட்டும் பாதுகாப்புடன் செல்லுங்கள். உங்கள் ஊரில் மழையா?
News August 28, 2025
RSS பிடியில் அதிமுக இருப்பது உறுதியானது: திருமாவளவன்

அதிமுகவை RSS வழிநடத்தினால் என்ன தவறு என எல்.முருகன் கூறியது, அதிமுக முழுக்க RSS கட்டுப்பாட்டில் சென்றுவிட்டதை காட்டுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரியார் வழியில் வந்த அதிமுக தற்போது வீர சாவர்க்கர் வழிவந்தவர்களால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிப்பதாகவும், இது தவறா, தவறில்லையா என்பதை EPS தான் பொதுமக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.