News January 23, 2025

நேதாஜியின் தியாகத்தை ஈடுசெய்ய முடியாது: மோடி

image

நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜி அளித்த பங்களிப்பை எதனாலும் ஈடுசெய்ய முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் பிறந்ததினத்தையொட்டி அவர் பதிவிட்டுள்ளார். அதில், பராக்ரம தினமான இன்று நேதாஜிக்கு தனது வணக்கத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். அவரது தொலைநோக்கு பார்வை தங்களுக்கு உத்வேகமாக இருப்பதாகவும், அவர் கண்ட இந்தியாவை உருவாக்க உழைத்து வருவதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News October 17, 2025

ATM யூஸ் செய்வதற்கு முன் இதை கவனிங்க!

image

*ATM மையத்தில் சந்தேகத்திற்குரிய பொருள்கள் இருப்பின், உடனடியாக வங்கி (அ) போலீஸை அணுகவும்.
*ATM செயல்பாட்டுக்கான SMS, Gmail-ஐ கண்காணியுங்கள்.
*ATM கார்டு தொலைந்தால் (அ) திருடப்பட்டால் உடனடியாக வாடிக்கையாளர் சேவையை அணுகி ‘Block’ செய்யுங்கள்.
*6 மாதத்திற்கு ஒருமுறை PIN-ஐ மாற்றுங்கள். *1234, பிறந்த தேதி போன்ற எளிதான PIN-களை தவிருங்கள். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 17, 2025

BREAKING: CP ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

துணை ஜனாதிபதி CP ராதாகிருஷ்ணனின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்ததில், வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த், சசிகலா ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

News October 17, 2025

கைது செய்யப்பட்ட 2-வது நாளே சிறையில் மர்ம மரணம்!

image

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் உயிரிழந்தார். இவர், கடந்த 2012-ல் மதுரை திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி பணம் பறித்த வழக்கில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 2-வது நாளே உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள், ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் சிறைச்சாலை பகுதியில் பதற்றமாக சூழல் நிலவுகிறது.

error: Content is protected !!