News January 23, 2025

3,000 பேர் நாதகவில் இருந்து விலகல்

image

நாதகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். நாதகவில் இருந்து வெளியேறிய 3,000 பேர் நாளை CM ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகின்றனர். சீமான் மீதான அதிருப்தியாலும், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததைக் கண்டித்தும் 38 மாவட்ட நிர்வாகிகள், 2021 சட்டமன்றத்தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட வேட்பாளர்கள் உட்பட 3,000 பேர் திமுகவில் இணைகின்றனர்.

Similar News

News December 29, 2025

IND vs NZ: டிக்கெட் விற்பனையில் முக்கிய மாற்றம்

image

IND அணி NZ-க்கு எதிராக 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜன.18-ல் இந்தூரில் நடக்கும் கடைசி போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *‘District by Zomato’ தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். *மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் ID கார்டுகளை சமர்ப்பிப்பது அவசியம். *வரும் 31-ம் தேதி காலை 11 மணி to ஜன.1 மாலை 5 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.

News December 29, 2025

நடிகை நந்தினி தற்கொலை.. அதிர்ச்சித் தகவல்

image

<<18703577>>’கௌரி’ சீரியல் நடிகை நந்தினி தற்கொலை<<>> செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு, பிரேக் காரணமாக அவர் பெங்களூருவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கி இருந்த அறையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

News December 29, 2025

மகளிர் மாநாட்டால் சங்கி கூட்டத்துக்கு தூக்கம் வராது: DCM

image

நிதி, கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமையாக மத்திய அரசு பறித்து வருவதாக DCM உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் நடைபெற்று வரும் திமுக மகளிர் மாநாட்டில் பேசிய அவர், சுயமரியாதை கொண்ட மகளிர் உள்ளவரை சங்கி கூட்டத்தால் தமிழ்நாட்டை நெருங்க முடியாது எனவும் சாடியுள்ளார். இந்த மாநாட்டை பார்த்து அடுத்த 10 நாள்களுக்கு சங்கி மற்றும் அடிமை கூட்டத்துக்கு தூக்கம் வராது என்றும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!