News March 27, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய 2 ஐஎஸ் தீவிரவாதிகள், சென்னையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
Similar News
News January 12, 2026
இவர் தூய்மை பணியாளர் மட்டுமில்ல.. தூய்மையானவர்!

மனித மனம் எப்போதும் தடுமாறக்கூடியதே. ஆனால், சென்னையை சேர்ந்த பத்மா, தன் வேலையை போலவே மனதளவிலும் தூய்மையானவராகவே உள்ளார். சென்னை தி.நகரில் அவர் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, 45 சவரன் தங்க நகைகள் கிடைத்துள்ளன. உடனே, அதனை அவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சுமார் ₹48 லட்சம் மதிப்பிலான நகைகளை தவறவிட்ட ரமேஷ் என்பவரிடம் நகை ஒப்படைக்கப்பட, பத்மாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன. Salute மேடம்!
News January 12, 2026
18 வருஷ வெயிட்டிங் ஓவர்! மீண்டும் டபுள் டக்கர் பஸ்!

1970-ல் கம்பீரமாக வலம் வந்த டபுள் டக்கர் பஸ்கள் சென்னையின் அடையாளமாகவே இருந்தன! பஸ்சின் மேல்தளத்தில் வேடிக்கை பார்த்து பயணிக்கவே, சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுத்த காலமது! ஆனால், அதிக பராமரிப்பு செலவு காரணமாக 2008-ல் சேவை நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று டபுள் டக்கர் பஸ் சேவையை CM ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், இது பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் என நம்பப்படுகிறது.
News January 12, 2026
காங்கிரஸாரின் கருத்தை கேட்க முடியாது: அமைச்சர்

திமுக கூட்டணியில் காங்., மதில் மேல் பூனையாக இருப்பதாக பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகளை ஒதுக்கிவிட்டதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஆயிரம் பேர் ஆயிரத்தெட்டு கருத்துகளை சொல்வார்கள்; அதையெல்லாம் கேட்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டணி நலன் குறித்து காங்கிரஸ் தலைவருடன் பேசி திமுக தலைவர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.


