News January 23, 2025

கோவை: ஆணவப் படுகொலை வழக்கில் தீர்ப்பு

image

கோவை மேட்டுப்பாளையத்தில், 2019ஆம் ஆண்டு, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்ததால், வினோத் குமார் என்பவர், தனது சொந்த தம்பியான கனகராஜ், அவரது மனைவி தர்ஷினி பிரியாவை, வெட்டி படுகொலை செய்தார். கோவையையே உலுக்கிய இந்த வழக்கில், வினோத் குமார் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. வினோத் குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கப்படலாம் என்பதால், வரும் 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படவுள்ளது.

Similar News

News October 25, 2025

BREAKING: கோவையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

image

கோவை, தெலுங்குபாளையம் கார் வாட்டர் வாஷ் நிறுவன ஊழியர்கள் ஹரிஷ், பிரகாஷ் ஆகியோர் நண்பர்களான அகத்தியன், சபா, பிரபாகரன் ஆகியோருடன் நேற்றிரவு காரில் சிறுவாணி சாலையில் பச்சாபாளையம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தின்மீது மோதியதில் இளைஞர்கள் 4 பேர் பலியாகினர். மேலும், சிகிச்சையில் இருந்த பிரபாகரன் என்பவரும் இன்று மாலை உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

News October 25, 2025

கோவை மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

கோவை: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 25, 2025

கோவை: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

image

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

error: Content is protected !!