News January 23, 2025
ஜல்கான் ரயில் விபத்து: PM மோடி இரங்கல்

மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
Similar News
News October 23, 2025
உடனே அனைத்து பள்ளிகளிலும்

கனமழை காரணமாக ராமநாதபுரத்தில் தொடக்க பள்ளியின் கட்டடம் விரிசல்களுடன் இடிந்து விழும் நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சியினர் ஒரு வீடியோ வெளியிட்டனர். இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. விரிசல்களுடன் இருக்கும் பள்ளி கட்டடங்களை போர்க்கால அடிப்படையில் சரி செய்யவும், நோய் தொற்று பரவாமல் இருக்க, பள்ளிகளில் தேங்கி இருக்கும் மழை நீரை அகற்றவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
News October 23, 2025
வங்கிக் கணக்கு இருக்கிறதா… முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
News October 23, 2025
லோடு மேன் பேச்சை கேட்டு EPS கூறுகிறார்: உதயநிதி

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.