News January 23, 2025
சாமல்பட்டியில் விபத்துக்குள்ளான காரில் குட்கா சிக்கியது

சாமல்பட்டி கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை தேசிய நெடுஞ்சாலையில், போலீசார் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் குஜராத் மாநில பதிவு எண் கொண்ட ஒரு கார் முன்பகுதி சேதமடைந்த நிலையில் சாலையோரம் நின்று இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த காரில் சோதனை செய்தனர். அதில் பைகளில் 4 கிலோ குட்கா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News August 19, 2025
கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) ஓசூர் மாநகராட்சியில் செயிண்ட் ஜோசப் பள்ளி, ராமகிருஷ்ண பரமஹம்சா பள்ளி மற்றும் சானசந்திரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாத்தூர் வட்டாரத்தில் எஸ்.வி.மஹால், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜாகிர் வெங்கடாபுரம் அரசு பள்ளி, காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நெடுங்கல் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க.
News August 18, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.18) இரவு 10 மணி முதல் காலை (ஆக.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க