News January 23, 2025

கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்கு: சிபிஐ விசாரணை

image

கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 19இல் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

Similar News

News November 8, 2025

இந்திய நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி

image

இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது, உலக வங்கி தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் நிதியுதவி பெறும் எந்த திட்டத்திலும் 2029-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 8, 2025

PAK-AFG சமாதான பேச்சுவார்த்தை நிறுத்தம்

image

PAK-AFG இடையே மோதல் நீடித்து வந்தாலும், மறுபுறும் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாக்., பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்கன் வாய்மொழி உத்தரவாதங்களை மட்டுமே அளிக்க விரும்புவதாக கூறிய ஆசிப், 4-வது சுற்று பேச்சுவார்த்தைக்கான எந்தத் திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

News November 8, 2025

சற்றுமுன்: சின்னத்திரை நடிகர் காலமானார்

image

‘உப்பு புளி காரம்’ என்ற வெப் சீரிஸில் நடித்த சின்னத்திரை நடிகர் பேரரசு(21) சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நடிகரும் உதவி இயக்குநருமான அவர், தனது சொந்த ஊரான பண்ருட்டி அருகே பைக்கில் சென்றபோது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த பேரரசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மரணம் கிராமத்தினரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. RIP

error: Content is protected !!