News January 22, 2025
மாணவர்கள் விரும்பும் உயர் கல்வியை உருவாக்கியுள்ளோம்

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை சார்பில் கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக விளையாட்டு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, உயர்கல்வியில் மாணவர்கள் எந்த பாடத்தை விரும்பினாலும், அதை படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இடம் இல்லை என்ற நிலையே புதுச்சேரியில் இல்லை, மாணவர்கள் நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்றார்.
Similar News
News September 17, 2025
புதுச்சேரி: பாஸ்போர்ட் விசாரிப்பு போலீசார் இடமாற்றம்

புதுச்சேரி மாநிலத்தில் காவல்துறையில் பாஸ்போர்ட் விசாரிப்பு பிரிவில் பணிபுரியும் நான்கு போலீசார் காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று இடமாற்றம். மேலும் போலிசார் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களிடம் விசாரணையின் போது லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் டி.ஜி.பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News September 16, 2025
மத்திய அமைச்சருடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

புதுவைக்கு வருகை தந்துள்ள மத்திய தொழிலாளர் நலம் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை, இன்று காலாப்பட்டு அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முதலமைச்சர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுவை சபாநாயகர் செல்வம் உடனிருந்தார். அப்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினர்.
News September 16, 2025
புதுச்சேரி விமான நிலையத்தில் பயணியர் சேவை தினம்

புதுச்சேரி விமான நிலையத்தில், பயணியர் சேவை தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் விமான நிலையத்தில், இலவச மருத்துவ பரிசோதனை முகாம், இரத்த தான முகாம், மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விளக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றனர்.