News January 22, 2025
கடலூரில் விரைவில் புத்தகத் திருவிழா- ஆட்சியர்

கடலூரில் விரைவில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா நடைபெறும். இந்த புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. இதற்காக 100 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் புத்தக திருவிழாவை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் துவக்கி வைக்க உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Similar News
News April 21, 2025
கடலூர்: விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட கலெக்டர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் www.sdat.tn.gov.in இணையதளத்தில் மே 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மாநில அளவிலான தேர்வுகள் மே 7 காலை 7 மணிக்கு நடைபெறும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 21, 2025
கடலூர்: 10th போதும், ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு பதவியின் கீழ் மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th, 12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
News April 21, 2025
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 41 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் <