News January 22, 2025
ஜன.26 ஆம் தேதி கிராம சபை கூட்டம்; கலெக்டர் அறிவிப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”எதிர்வரும் 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். அன்றைய தினம் காலை 11 மணியளவில் துவங்கும் கிராம சபை கூட்டத்திற்கு பொதுமக்கள் திரளாக பங்கு கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 22, 2025
நீலகிரி: டிகிரி போதும் ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

நீலகிரி பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News October 22, 2025
நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, நீலகிரியில் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலா தலங்களான தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் மரக்காடுகள், எட்டாம் மைல், கேர்ன்ஹில் உள்ளிட்ட 5 சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
News October 22, 2025
நீலகிரி மக்களே உஷார்! வெளுக்கப்போகும் மழை

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக, அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.