News January 22, 2025
டி20 போட்டி – பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது. கடற்கரை- வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 6, 2025
பெரும்பாக்கம் ஐடிஐயில் மாணவர் சேர்க்கை நீடிப்பு

பெரும்பாக்கம் அரசு ஐ.டி.ஐ-யில் கணினி பழுது நீக்கத்தில் 5 இடங்கள் மற்றும் பைக், கார் மெக்கானிக் பயிற்சியில், 36 காலி இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள், வரும் 14ம் தேதிக்குள், நேரில் வந்து விண்ணப்பித்து, பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். மேலும், 9962986696 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் என, ஐ.டி.ஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 6, 2025
சென்னை: மர்மமான முறையில் இறந்த தொழிலாளி!

மேற்கு வங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பீஜூல் (31) கோல்டன் ஜார்ஜ் நகரில் கட்டடப்பணி செய்து வந்தார். உடல்நலக்குறைவால் அவர் பணிக்கு செல்லாமல் தன் அறையில் இருந்தார். இரவு சக பணியாளர்கள் திரும்பி வந்த போது, பீஜூலை கழுத்தில் கயிறுடன் தரையில் கிடப்பதை கண்டனர். மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் உயிரிழந்தார். போலீசார், இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 6, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் நேற்று (நவ.05) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


