News January 22, 2025
இதுவரைக்கும் 2 விஷயத்துக்குதான் பயந்தேன்

தனது சினிமா கெரியரில் 2 விஷயங்களுக்கு மட்டுமே பயப்பட்டதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முதல் நாள் படப்பிடிப்பின்போதும், அப்படத்தின் ரிலீஸின்போதும் பயந்ததாகக் கூறினார். 25 ஆண்டுகள் சினிமாவில் நீடிப்பது சாதாரண காரியம் அல்ல எனக் கூறிய மாதவன், மக்களின் ஊக்கம்தான் தன்னை தொடர்ந்து பயணிக்க வைப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News August 11, 2025
கூலி ஃபீவர்.. விடுமுறையை அறிவிக்கும் கம்பெனிகள்!

‘கூலி’ படம் ரிலீஸாக இருப்பதால், ரஜினியின் தரிசனத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றன. இந்நிலையில், ரிலீஸ் நாளான ஆக. 14 அன்று, சில நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்துள்ளன. மதுரையை சேர்ந்த ‘Uno aqua care’ நிறுவனம் ஏற்கெனவே விடுமுறையை அறிவித்தது. இந்நிலையில், சிங்கப்பூரில் ‘FARMER CONSTRUCTIONS PTE LTD’ நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறையை அறிவித்துள்ளது. எங்கும் ‘கூலி’ ஃபீவர்தான்!
News August 11, 2025
ஜிம்முக்கு செல்பவர்களே, உஷார்!

உடல்நலனை காக்க ஜிம்முக்கு செல்கிறோம். ஆனால், அங்கேயே உடல்நலனுக்கு ஆபத்து இருந்தால்? ஆம், ஜிம்மில் உள்ள வெயிட்களில், டாய்லெட் சீட்டில் இருப்பதைவிட 362 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக பிரபல fitrated நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், exercise bikes-இல் கேண்டீன் ட்ரேவைவிட 39 மடங்கு பாக்டீரியாக்கள் இருப்பதாவும் எச்சரிக்கிறது. எனினும், இதனால் நோய் தாக்கும் அபாயம் குறைவு தானாம்.
News August 11, 2025
என் சாவுக்கு 3 பேரு தான் காரணம்.. மாணவி சோக முடிவு

ராகிங் கொடுமை ஒரு கல்லூரி மாணவியின் சாவிற்கு காரணமாகியுள்ளது. கேரளாவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு B.A. படிக்கும் மாணவி அஞ்சலி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கடிதத்தில், ‘எனது மரணத்திற்கு காரணம் இந்த 3 பேர் தான். என்னை மன ரீதியாக தொல்லை கொடுத்து சோர்வடைய செய்தது வர்ஷா, பிரதீப் மற்றும் பிற நண்பர்களே’ எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது, 3 பேரையும் போலீஸ் விசாரித்து வருகிறது. எதற்கும் தற்கொலை தீர்வல்ல!