News January 22, 2025
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வு பெற்றோருக்கு 21 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் பணபலனை கொடுக்க வேண்டும், ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. CITU உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Similar News
News January 12, 2026
நாகை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது tn<
News January 12, 2026
தமிழர்களை இழிவாக பேசிய ராஜ் தாக்கரே!

மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி <<18824079>>அண்ணாமலை<<>> பரப்புரை மேற்கொண்டார். இந்நிலையில், மகாராஷ்டிராவுக்கும், அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம் என ராஜ் தாக்கரே (நவநிர்மான் சேனா) கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அண்ணாமலையை ரசமலாய் என விமர்சித்த அவர், தமிழர்களை தரக்குறைவாக கூறும் பால் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய ‘உத்தாவ் லுங்கி, பஜாவ் புங்கி’ என்ற முழக்கத்தை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
News January 12, 2026
BIG NEWS: 3 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கம்

பாமக MLA-க்கள் 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். மயிலம் MLA சிவக்குமார், மேட்டூர் MLA சதாசிவம், தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களை நீக்குவதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பது ராமதாஸ் – அன்புமணி இடையே போட்டி நிலவும் நிலையில், இந்த நீக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


