News March 27, 2024

மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்!

image

நாகப்பட்டினம் மாவட்டம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரா . பேபி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/ வருவாய் கோட்டாட்சியர் கோ. அரங்கநாதன் ஆகியோர் உள்ளனர்.

Similar News

News October 28, 2025

நாகை: மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

image

வேளாங்கண்ணி கடலில் குளிக்கும் போது நேற்று மாயமான பெங்களூர் இளைஞர் பாஹாபா உடல் இன்று செருதூர் கடற்கரையில் கரை ஒதுங்கியது. நேற்று நண்பர்களுடன் கடலில் குளித்த 7 பேரில், அலையில் சிக்கிய மூவரில் அருண், முனுஷ் ஆகியோர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாயமான பாஹாபா இன்று உயிரிழந்த நிலையில் செருதூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதை தொடர்ந்து கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 28, 2025

நாகை: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். மேற்கண்ட தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News October 28, 2025

நாகை மக்களே.. இனி எளிதாக வானிலை தகவல் அறியலாம்!

image

நாகையில் வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு <>TN-ALERT<<>> என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுமாறு நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!