News January 22, 2025
கடலூரில் மின்தடை அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.23) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் கேப்பர்மலை, ஸ்ரீமுஷ்ணம், ஊமங்கலம், மேலப்பாளையூர், சிற்றரசூர், கீழ்கவரப்பட்டு, திருப்பாதிப்புலியூர், மேல்பட்டாம்பாக்கம், காவனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
Similar News
News October 19, 2025
கடலூர் மத்திய சிறையில் கஞ்சா பறிமுதல்!

கடலூர் மத்திய சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 கைபேசிகள், சிம் கார்டுகள் மற்றும் 50 கிராம் கஞ்சா ஆகியவற்றை போலீசார் கண்டெடுத்தனர். இதுகுறித்து சிறை அலுவலர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், முதுதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News October 19, 2025
கடலூர்: வீடுகள் பெற விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்டம், மேல்பூவாணிகுப்பம் சமத்துவபுரத்தில் வீடு ஒதுக்கீடு பெற வரும் நவ.5-ம் தேதிக்குள் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகளில் SC/ST- 40%, BC-க்கு 25% , MBC-க்கு 25 % மற்றும் இதர வகுப்பினருக்கு 10 % ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News October 19, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!