News January 22, 2025
அரியலூர்: இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது!

ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.23) ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, அழகாபுரம், மீன்சுருட்டி, அழகர்கோயில், வேம்புகுடி, முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it now
Similar News
News November 6, 2025
அரியலூர்: கல்வி உதவிதொகை வேண்டுமா?

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவிதொகை திட்டத்தில், OBC, EBC, DNT பிரிவை சேர்ந்த பட்டியலிடப்பட்ட (டாப் கிளாஸ் ஸ்கூல்ஸ்) பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்களை Scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
News November 6, 2025
அரியலூர்: சட்ட உதவி பாதுகாப்பு மையம் துவக்கம்

அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அரியலூரில் உள்ள பல்துறை வளாகத்தில் நவம்பர் 5-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இதில் அரியலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மலர் வாலண்டினா கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மாவட்ட எஸ்.பி விஸ்வேஷ் பா சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
News November 6, 2025
அரியலூர்: பெண் குழந்தை உள்ளதா? இத செய்ங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம். SHARE IT NOW…


