News January 22, 2025

பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

Similar News

News December 3, 2025

வாழைப்பழம் சாப்பிட்டு சிறுவன் உயிரிழப்பு

image

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னை சத்யா நகரை சேர்ந்த மாணிக்க முத்துலட்சுமி தம்பதியினரின் ஐந்து வயதில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கூலி வேலை பார்க்கும் தம்பதிகள் வழக்கம்போல் சாய்சரணை தனது பாட்டியுடன் வீட்டில் விட்டுவிட்டு சென்றுள்ளனர் அப்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் கொடுக்கப்பட்டது அது மூச்சு குழாய் வழியாக சென்றதால் சாய்சரண் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளார்.

News December 3, 2025

ஈரோட்டிற்கு புதிய பெருமை

image

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலை மற்றும் விவசாயப் பெருமையை எடுத்துரைக்கும் வகையில், மாநிலத்தில் புவியியல் குறியீடு (Geographical Indications – GI) அங்கீகாரம் பெற்ற பொருட்களின் பட்டியலில் மேலும் 5 பொருட்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதில், ஈரோடு மாவட்டத்தில் கவுந்தபாடியில் தயாரிக்கப்படும் நாட்டு சக்கரை இடம்பெற்றுள்ளது. (ஈரோடு மக்களே நம்ம ஊர் பெருமையை SHARE பண்ணுங்க)

News December 3, 2025

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

image

பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தோரை ஊக்குவிக்க சர்வதேச மகளிர் தின விழாவில் முதல்வரால் அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பிறந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான சமூக சீர்திருத்தம் பத்திரிக்கை நிர்வாகம் உள்ளிட்ட துறையில் சிறந்து விளங்குவோர் https://awards.tn.gov.in. இணையதளத்தில் வரும் 31ஆம் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

error: Content is protected !!