News January 22, 2025

குரூப் 1 மூலம் தேர்வான 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

image

குரூப் 1 மூலம் டிஎஸ்பிக்களாக பணியில் சேர்ந்த 25 போலீஸ் எஸ்பிக்களுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யுபிஎஸ்சி மூலம் தேர்வாகி ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவதைப் போல, குரூப் தேர்வு மூலம் தேர்வாகும் நபர்களுக்கும் ஐபிஎஸ் அந்தஸ்து வழங்கப்படும். இது கடந்த 2018 ஆண்டு முதல் நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக அரசின் பரிந்துரையின் படி தற்போது மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

Similar News

News August 26, 2025

நாம் தான் விமானத்தை கண்டுபிடித்தோம்: அமைச்சர்

image

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு நீண்ட காலங்களுக்கு முன்பே, இந்தியாவிடம் புஷ்பக விமானம் இருந்ததாக மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மகாபாரத காலகட்டத்தில் டிரோன்கள், ஏவுகணைகள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்கள் நம்மிடம் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, விண்வெளிக்கு முதலில் சென்றது அனுமன் தான் என பாஜக MP <<17510319>>அனுராக் தாக்கூர்<<>> கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

News August 26, 2025

AI-ஆல் சினிமாவிற்கு ஆபத்து: அனுராக் எச்சரிக்கை

image

AI-ஆல் உருவாகும் படங்கள் சினிமாவிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் எச்சரித்துள்ளார். AI திரைப்படங்கள் கலைஞர்களை புறக்கணித்து, அவர்களை வெறும் கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரர்களாக மாற்றிவிடும் எனவும், இதனால் திறமையான கலைஞர்களை இழக்கும் சூழல் ஏற்படும் என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும், AI படங்களை விட்டு நடிகர்கள் வெளியேறவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 26, 2025

சற்றுமுன்: நகைக்கடன்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தங்கம் விலை அதிகரித்து வரும் நிலையில், நகர கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு முன்னுரிமை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளின் உயிர் நாடியான பயிர் கடனை நகர கூட்டுறவு சங்கங்களில் நிறுத்தவும், வீட்டுக்கடன், நகைக்கடன், வணிகக் கடன்கள் வழங்க கவனம் செலுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிர் கடனை நிறுத்தினால், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!