News January 22, 2025

400 கிமீ வேகத்தில் பாயும் புல்லட் ரயில்.. இந்தியாவில் எப்போது?

image

2029-30 ஆண்டுக்குள் இந்தியா, ஜப்பான் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில், E10 புல்லட் ரயில் அறிமுகமாகிறது. முன்னதாக E5 புல்லட் ரயில் இந்தியாவுக்கு வரவிருந்த நிலையில், தற்போது அட்வான்ஸ்ட் மாடலான E10 அறிமுகமாகவுள்ளது. E5 ரயில் 320 km வேகம் செல்லக்கூடியது, E10 மணிக்கு 400 km வேகம் செல்லும். முதல் வழித்தடமாக அகமதாபாத் டூ மும்பை ரூட்டில் 2 hr 07 mins-ல் 446 கிமீ தூரத்தை கடக்கவுள்ளது. அதிவேக இந்தியா!

Similar News

News March 7, 2026

தோல்வியை நோக்கி செல்லும் இந்தியா

image

ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்தியா தடுமாறி வருகிறது. இன்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 105/6 ரன்கள் எடுத்தது. ஏற்கெனவே இந்தியா முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மறுபுறம் ஆஸ்திரேலியா சதர்லேண்டின் சதத்தால் முதல் இன்னிங்சில் 323 ரன்களை எடுத்தது. 2 இன்னிங்ஸையும் சேர்ந்து சதர்லேண்ட் 6 விக்கெட்களை வீழ்த்தி பவுலிங்கிலும் அசத்தியுள்ளார்.

News March 7, 2026

மனைவியின் தாய்ப்பாலை குடித்த பிரபல நடிகர்

image

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகம் எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

News March 7, 2026

BREAKING: சம்பள உயர்வு.. அறிவித்தது தமிழக அரசு

image

மே மாதம் முதல் மருத்துவத் துறையில் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதன் மூலம், 41,000 ஊழியர்களுக்கு 2026- 27-ம் ஆண்டுக்கான ஊதியம் உயர்த்தப்படும் என்றும் இதன்மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ₹169 கோடி செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வளவு ஊதிய உயர்வு என்ற விவரங்களுடன் விரைவில் அரசாணை வெளியாகும்.

error: Content is protected !!