News January 21, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தீ குளிக்க முயற்சி

image

இராமநாதபுரத்தை அடுத்த சூரங்கோட்டை ஊராட்சியில் உள்ள மேலத்தெருவை சேர்ந்தவர் சக்திராஜன். இவர் ஊராட்சியில் நடக்கின்ற முறைகேடு குடுத்து தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி ஊராட்சிமன்ற தலைவர் சக்திராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Similar News

News August 22, 2025

ராம்நாடு: ஆக.27ல் 3 ரயில்கள் ரத்து!

image

ராமநாதபுரம் – சத்திரக்குடி இடையே ஆக.27ல் ரயில்வே பொறியியல் பிரிவு சார்பில் பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று ராமேஸ்வரம் – மதுரை பாசஞ்சர் ரயில் (வ.எண் : 56714), திருச்சி – ராமேஸ்வரம் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்கள்:16849/16850), மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை உங்கள் நண்பர்கள்&உறவினர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News August 22, 2025

ராம்நாட்டில் சிதைந்து கிடந்த ஆண் உடலால் பரபரப்பு!

image

ராமநாதபுரம்: சக்கரைகோட்டை ரயில்வே கேட் பகுதியில் நேற்று(ஆக.21) காலையில் ரயிலில் அடிபட்டு 50 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் முழுவதுமாக நசுங்கி, துண்டு துண்டாக முகம் சிதைந்து முற்றிலும் அடையாளம் காண முடியாத நிலையில் கிடந்தது. இறந்து கிடந்த நபர் யார்?, இது தற்கொலையா (அ) தவறி விழுந்தாரா? என்ற கோணத்தில் ரயில்வே போலீசார் மற்றும் கேணிக்கரை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

News August 21, 2025

சக்கரகோட்டை அருகே ரயிலில் அடிபட்டி ஒருவர் உயிரிழப்பு

image

இன்று காலை சுமார் 7 மணிக்கு முன்பாக உச்சப்புளி ரயில் நிலையத்திற்கும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திற்கும் இடையே சர்க்கரை கோட்டை ரயில்வே கேட்டு அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவில் அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரயில் ராமேஸ்வரம் மதுரை பயணிகள் ரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

error: Content is protected !!