News March 27, 2024
இதுவரை ரூ.2.9 கோடி பணம் பறிமுதல்

மக்களவை தேர்தல் வரும் ஏப்.19ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு எடுத்து வரும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை ரூ.2,09,46,060 பறிமுதல் செய்துள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 16, 2025
கோவை வரும் பிரதமர் மோடி!

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் வரும் 19 – 21 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கோவை கொடிசியா அரங்கில், இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார். மேலும், சிறப்பாக செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். மாநாட்டில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் பங்கேற்கின்றனர்.
News November 16, 2025
கோவையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்!

கோவையில் வரும் 29 தேதி அன்று, தமிழ்நாடு அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 250 தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், வேலை தேடுபவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.
News November 16, 2025
கோவை: உள்ளூரில் வேலை அரிய வாய்ப்பு!

கோவையில் செயல்பட்டு வரும் Glen Kitchen Appliances நிறுவனத்தில் Sales Executive பணியிடம் காலியாக உள்ளது. சம்பளம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை வழங்கப்படும். வயது வரம்பு 18-35. Fresher மற்றும் முன் அனுபவம் உள்ள ஆண், பெண் இருபாலரும், வரும் 29ம் தேதிக்குள் இந்த லிங்கை <


