News January 21, 2025

கொலை வழக்கில் 7 பேர் குண்டாஸ்

image

நெல்லை மாவட்டம் கீழ்நத்தம் மேலூரைச் சேர்ந்த மாயாண்டி. என்பவர் வழக்கு ஒன்றில் விசாரணைக்காக ஆஜராக கடந்தாண்டு டிச.20 அன்று நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் இவரை ஓட, ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்த நிலையில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தோஷ் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News August 22, 2025

நெல்லையில் முக்கிய ரயில்கள் சேவை மூன்று மாதம் நீடிப்பு

image

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் மற்றும் திருச்சிராப்பள்ளி – தாம்பரம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவைகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அதாவது நவம்பர் 2025 வரை நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 22, 2025

தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில்: பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் வீரதீர செயல் புரிந்து சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 மாநில அரசின் விருது ஒரு லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படும் இதற்கு awards:tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

நெல்லை வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

image

நெல்லை மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..

error: Content is protected !!