News January 21, 2025

கௌசல்யா ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?

image

நடிகை கௌசல்யா (45), தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார். குடும்பம், குழந்தை என்ற பெரிய பொறுப்புகளை தன்னால் கையாள முடியுமா என்ற தயக்கம் இருப்பதாகவும், அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார். தனக்கு ஒரு காதல் உறவு இருந்ததாகவும், அது திருமணம் வரை சென்று நின்றுவிட்டதாகவும் கௌசல்யா கூறினார்.

Similar News

News August 26, 2025

புதிய மகளிர் உரிமைத் தொகை.. தேதி குறிச்ச அரசு!

image

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது பணம் டெபாசிட்டாகும் என காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ல் பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாள்களில் இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பயனர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

News August 26, 2025

காலை உணவின் தரத்தை உயர்த்துக: நயினார்

image

போலி விளம்பரங்களால் குளறுபடிகளை மறைத்துவிட திட்டமா என நயினார் சாடியுள்ளார். தாராபுரம், பூனாயிருப்பு அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை CM-க்கு சுட்டிக்காட்டிய அவர், ஏழைக்குழந்தைகள் தானே படிக்கிறார்கள் என்ற அலட்சியத்தோடு உணவு தயாரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை விரிவுப்படுத்துவது பலனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

News August 26, 2025

வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!