News January 21, 2025
உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்? சேகர்பாபு கேள்வி

பரந்தூர் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்த விஜய், DMKவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பியதற்கு, அண்ணா ஹசாரே போல ஓராண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா விஜய் களத்திற்கு சென்றார் என பதிலடி கொடுத்தார். அத்துடன், நேற்றைய நிகழ்வு நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும், இன்று தாங்கள் மக்கள் பணிக்கு வந்துவிட்டதாகவும் இதுவே திமுக அரசு என்றும் கூறினார்.
Similar News
News August 26, 2025
புதிய மகளிர் உரிமைத் தொகை.. தேதி குறிச்ச அரசு!

மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பித்தவர்கள் எப்போது பணம் டெபாசிட்டாகும் என காத்திருக்கின்றனர். அவர்களுக்கு அண்ணா பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 15-ல் பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில நாள்களில் இந்த திட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட பயனர்களின் பட்டியல் வெளியாகவுள்ளது. தற்போது, 1.15 கோடி மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
News August 26, 2025
காலை உணவின் தரத்தை உயர்த்துக: நயினார்

போலி விளம்பரங்களால் குளறுபடிகளை மறைத்துவிட திட்டமா என நயினார் சாடியுள்ளார். தாராபுரம், பூனாயிருப்பு அரசு துவக்கப்பள்ளிகளில் வழங்கப்பட்ட காலை உணவில் பல்லி கிடந்ததை CM-க்கு சுட்டிக்காட்டிய அவர், ஏழைக்குழந்தைகள் தானே படிக்கிறார்கள் என்ற அலட்சியத்தோடு உணவு தயாரிக்கப்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். காலை உணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை விரிவுப்படுத்துவது பலனளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
News August 26, 2025
வியாழக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை மறுநாள் (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.