News January 21, 2025
புதுச்சேரி: குழந்தைகள் புத்தக கண்காட்சி நாளை தொடக்கம்

புதுச்சேரி கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியப்பெருமாள் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கருவடிக் குப்பத்தில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் குழந்தைகள் புத்தக மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி நாளை புதன்கிழமை தொடங்கி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் சபாநாயகர், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
Similar News
News September 10, 2025
புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
புதுச்சேரியில் பாஜகவினர் கொண்டாட்டம்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றியை கொண்டாடும் வகையில் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே மாநிலத் தலைவர் VP.ராமலிங்கம் (Ex-MLA) தலைமையில் இன்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் மற்றும் மாநில, மாவட்ட , தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.