News January 21, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்னவெங்காயம் மற்றும் வெள்ளரி போன்றவற்றைப் சாகுபடி செய்யும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் விளைப்பொருள்களை ஏற்றுமதி மேற்கொள்வதற்கான சான்றிதழ்களைப் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.15000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 20, 2025
ஒட்டன்சத்திரம் போக்சோ வழக்கு சிறை மற்றும் அபராதம்!

ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த தின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி(58) என்பவரை ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செல்லப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் இன்று விதித்தனர்.
News August 20, 2025
தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

தனியார்,அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், குஜிலியம்பாறை தொழில்பயிற்சி நிலையத்துக்கு (கரிக்காலிப் பிரிவு) நேரில் சென்று சோ்க்கை மேற்கொள்ளலாம். விவரங்களுக்கு குஜிலியம்பாறை அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலும், 99943 09861, 96008 27733 கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.
News August 19, 2025
திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<