News January 21, 2025
ரிஷப் பண்ட்க்கு LSG ஜெர்ஸியை வழங்கிய கோயங்கா

ரிஷப் பண்ட்க்கு LSG அணி ஜெர்ஸி அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வழங்கினார். சமீபத்தில் நடந்த IPL மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு அவரை LSG வாங்கியது. இதன்மூலம், 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலைக்கு ஏலம் போன வீரராக பண்ட் மாறியுள்ளார். அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் அனைத்து தகுதிகளும், ஆட்ட நுணுக்கங்களும் பண்டிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
திமுக அரசு செய்யாததை தொகுத்து புத்தகம்: அன்புமணி

சென்னையில் பாமக சார்பில் விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் பேசிய அன்புமணி, திமுக சார்பில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் முழுமையாக நிறைவேற்றப்பட்டவை 66 என்றும், அரைக்குறையாக நிறைவேற்றப்பட்டவை 66, முழுமையாக நிறைவேற்றப்படாதவை 373 என்றார். திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94% வாக்குறுதிகளே முழுமையாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறினார்.
News August 26, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪காலை <<17520101>>உணவுத் <<>>திட்டத்தை விரிவுப்படுத்திய CM ஸ்டாலின்!
✪விஜய்காந்த் நிலை <<17519989>>விஜய்க்கும் <<>>வரலாம்.. செல்வப்பெருந்தகை
✪தங்கம் <<17520504>>விலை <<>>சவரனுக்கு ₹400 உயர்வு
✪இந்தியா <<17520480>>மீதான<<>> 50% வரி.. இடியை இறக்கிய USA
✪RCB <<17519842>>அணிக்கு <<>>திரும்ப ரெடி.. ABD
News August 26, 2025
₹2000 வரை கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.