News January 20, 2025
மர்மநோயால் அதிகரிக்கும் பலி: குழப்பத்தில் அரசு

J&Kல் உள்ள ரஜௌரி மாவட்டத்தின் பதால் கிராமத்தில் மர்ம நோய் ஒன்று மனிதர்களை வேட்டையாடி வருகிறது. கடந்த டிசம்பரில் முதல் உயிரிழப்புகள் நிகழ்ந்து வரும் நிலையில், தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அக்கிராமத்தில் வசிக்கும் 3,000 பேரை பரிசோதித்தும், என்ன நோய் என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நிலைமையை உணர்ந்து மத்திய, மாநில அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவை அமித்ஷா அமைத்துள்ளார்.
Similar News
News August 26, 2025
இன்றே இப்போதே கேட்டுவிடுங்கள்..

‘நாங்கல்லாம் அந்த காலத்துல’ எனச் சொல்லும் தலைமுறையிலும் சரி, இன்றைய நவீன வாழ்விலும் சரி, நாம் பரபரப்பாகவே இயங்கி வருகிறோம். இதனிடையே, நமக்கு பிடித்தவர்களிடம் கூட சில விஷயங்களை பேசவோ, கேட்கவோ மறந்திருப்போம் (அ) வேண்டுமென்றே தவிர்த்திருப்போம். இதற்கான விடைகளை தெரிந்துகொண்டால் சந்தேகம், பயம், வெறுப்பு போன்றவை அடுத்த நொடியே நீங்கும். இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு உள்ளதா, யாரிடம் கேட்கப் போகிறீர்கள்?
News August 26, 2025
சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்: வேலுமணி அட்டாக்

தவெக மாநாட்டில் ஸ்டாலின், EPS என யாரையும் விட்டு வைக்காமல், விஜய் அட்டாக் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், இபிஎஸ் பற்றி பேச தவெக தலைவர் விஜய்க்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி கட்சி தொடங்கிய சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டு போய்விட்டார்; அதே நிலைதான் விஜய்க்கும் வரும் என்று சாடியுள்ளார்.
News August 26, 2025
விஜய்க்கு எதிராக போட்டியிடும் பிரபல நடிகர் இவரா?

வரும் தேர்தலில் ஆட்சியை தக்கவைக்க பல ஸ்கெட்ச்களை போட்டு வருகிறது திமுக. இதில் ஒரு ஸ்கெட்ச்சாக, விஜய் போட்டியிடும் தொகுதியில் விஷாலை களமிறக்க உதய் தரப்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்பட்டது. உதய்யின் நெருங்கிய நண்பர் என்பதால் விஷாலும் இதனை ஏற்பார் என பேசப்பட்ட நிலையில், ’நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்’ என சமீபத்தில் பேட்டியளித்திருக்கிறார் விஷால். ஒருவேளை இருக்குமோ?