News January 20, 2025

₹5,600,830,000,000,000… இந்தியா இழந்த செல்வம்

image

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர், தங்கள் நாட்டுக்கு கொள்ளையடித்து சென்ற செல்வத்தின் மதிப்பு ₹5,601 லட்சம் கோடி என்று ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ‘Takers, Not Makers’ என்ற அந்த அறிக்கையில், பிரிட்டனில் பணக்கார வர்க்கம் உருவாக இதுதான் காரணம் என்றும், உலகப் பொருளாதாரத்தில் 1750-ல் 25% இருந்த இந்தியாவின் பங்களிப்பு, ஆங்கிலேயரின் சுரண்டலால், 1900-ல் 2% ஆகக் குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News August 26, 2025

இரட்டை வேடம் போடும் திமுக: அன்புமணி

image

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என TN அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி அறிக்கை வெளியிட்ட அன்புமணி, இத்திட்டத்துக்காக கிணறுகள் அமைக்க ONGC-க்கு அனுமதி அளித்தது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்றும், இந்த முடிவை அவர்கள் தன்னிச்சையாக எடுத்ததாக திமுக நாடகமாடுவதாகவும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் சாடினார்.

News August 26, 2025

இன்றே இப்போதே கேட்டுவிடுங்கள்..

image

‘நாங்கல்லாம் அந்த காலத்துல’ எனச் சொல்லும் தலைமுறையிலும் சரி, இன்றைய நவீன வாழ்விலும் சரி, நாம் பரபரப்பாகவே இயங்கி வருகிறோம். இதனிடையே, நமக்கு பிடித்தவர்களிடம் கூட சில விஷயங்களை பேசவோ, கேட்கவோ மறந்திருப்போம் (அ) வேண்டுமென்றே தவிர்த்திருப்போம். இதற்கான விடைகளை தெரிந்துகொண்டால் சந்தேகம், பயம், வெறுப்பு போன்றவை அடுத்த நொடியே நீங்கும். இவ்வாறான கேள்விகள் உங்களுக்கு உள்ளதா, யாரிடம் கேட்கப் போகிறீர்கள்?

News August 26, 2025

சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்: வேலுமணி அட்டாக்

image

தவெக மாநாட்டில் ஸ்டாலின், EPS என யாரையும் விட்டு வைக்காமல், விஜய் அட்டாக் செய்ததுதான் தற்போது பேசுபொருளாக உள்ளது. இந்நிலையில், இபிஎஸ் பற்றி பேச தவெக தலைவர் விஜய்க்கு உரிமையில்லை என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவில் மிகப்பெரிய கூட்டத்தை கூட்டி கட்சி தொடங்கிய சிரஞ்சீவியே கட்சியை கலைத்துவிட்டு போய்விட்டார்; அதே நிலைதான் விஜய்க்கும் வரும் என்று சாடியுள்ளார்.

error: Content is protected !!