News January 20, 2025
உயர் நீதிமன்றத்தை நாடுவோம்: காங்கிரஸ் தலைவர்

புதுச்சேரி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, மது ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தை நாடுவோம், பல்கலைக்கழக மாணவியிடம் அத்துமீறல் குறித்து முழு விசாரணை நடத்தி உரியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்றார்.
Similar News
News September 11, 2025
புதுச்சேரி: அரசு சார்பில் குடியிருப்பு வசதி ஆணை

புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 குடும்பங்களுக்கு குடியிருப்பு வசதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை புதுச்சேரி மாநில வீட்டுவசதி அமைச்சர் திருமுருகன் மற்றும் அமைச்சர் ஜான்குமார் ஆகியோரின் முன்னிலையில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
News September 10, 2025
புதுச்சேரி: வங்கி பணம் காணாமல் போகிறதா?

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <
News September 10, 2025
புதுவையில் குடிநீரை வைத்து அரசியல் நாடகம் !

புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில். புதுவையில் சுகாதாரமற்ற குடிநீரால் சிலர் மரணம் அடைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.இது மிகவும் வருத்தமளிக்க கூடியது. இதை மையப்படுத்தி திமுக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதில் ஆளுநர் , முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.