News January 20, 2025
மனிதர்களுடன் மோதும் ரோபோக்கள்

மனிதர்கள் vs ரோபோக்கள் இடையேயான மாரத்தான் போட்டியை வருகிற ஏப்ரல் மாதம் நடத்த உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 12,000 மனிதர்கள் ரோபோக்களுடன் போட்டி போட உள்ள வரலாற்று நிகழ்வு முதல்முறையாக நடைபெற உள்ளது. 21 கி.மீ தூரம் நடைபெறும் இந்த ரேஸில், முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மனித வடிவில் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகள் ரோபோட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன.
Similar News
News August 26, 2025
வரலாற்றில் இன்று

*1910 – நோபல் பரிசு வென்ற அன்னை தெரசா பிறந்த தினம்
*1954 – நடிகரும் தயாரிப்பாளருமான ராஜ்கிரண் பிறந்த தினம்
*1966 – தென்னாப்பிரிக்காவில் எல்லைப் போர் ஆரம்பமானது
*1972 – 22-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியில் தொடங்கியது
*1978 – விண்ணுக்கு பயணித்தார் முதல் ஜெர்மனி விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான்.
News August 26, 2025
புதிய வருமான வரி விதிகள்… டிசம்பரில் முக்கிய அறிவிப்பு

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது. கடந்த ஆக.,12-ம் தேதி புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உரிய தேதிக்குள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாவிட்டாலும் டிடிஎஸ் தொகையை கோர இந்த மசோதா வழிவகுத்துள்ளது. வருமான வரி தாக்கலை எளிமைப்படுத்தும் பல அம்சங்களும் இதில் உள்ளதாம்.
News August 26, 2025
SKவின் ‘அமரன்’ படத்துக்கு கேரளாவில் விருது

கேரள திரைப்பட விமர்சகர்கள் சங்கத்தின் விருது விழாவில், ‘அமரன்’ ‘சிறந்த பிறமொழித் திரைப்படம்’ விருதை வென்றுள்ளது. ‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு, கேரள அமைச்சர் வாசவன் விருது வழங்கி கெளரவித்தார். சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தழுவி எடுக்கப்பட்டது.