News January 20, 2025
தென்காசி மக்கள் குறைத்தீர் முகாம் நிறைவு

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமையில் இன்று(ஜன.20) மக்கள் குறைதீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து தங்களது குறைகளை தீர்க்க கோரி 455 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
Similar News
News September 30, 2025
தென்காசி: ரோட்டில் அடிபட்டு கிடந்த மான்

தென்காசி, சுரண்டையில் இருந்து சாம்பவர்வடகரை செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடிபட்ட நிலையில் கிடந்த மானை அப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த வனத்துறையினர் சாலையில் அடிபட்டு கிடந்த மானிற்கு முதலுதவி அளித்து அதனை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் விட்டனர்.
News September 30, 2025
தென்காசி: தனியார் பள்ளிகளில் அதிக வசூலா??

தென்காசி மக்களே, நாளை விஜயதசமி உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்கும் முன், தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு விதிக்கபட்ட கட்டண விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் மேலாக வசூலித்தால், 044-28251688 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். தென்காசி தனியார் பள்ளி கட்டணம் முழுப் பட்டியலுக்கு இங்கே <
News September 30, 2025
கீழப்பாவூர் ஏக தின தீர்த்தவாரி உற்சவம் தேதி அறிவிப்பு

கீழப்பாவூர் உள்ள நரசிம்ம பெருமாள் கோயிலில் புரட்டாசி திருவோண ஏகதின தீர்த்தவாரி உற்சவம் அக்டோபர் 2ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலைஏழு மணி முதல் பெருமாள் தெப்ப குளத்திற்கு பெருமாள் எழுந்தருளல், தொடர்ந்து பல்வேறு பூஜைகள், தீர்த்த வலம் வருதல், தீபாராதனை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்து வருகின்றனர்.