News January 20, 2025
பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவி தற்கொலை

ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி . ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி செல்ல வேண்டிய அவர் பள்ளிக்கு செல்ல முடியாது என கூறினார். இதனால், மாணவியை அவரது தாயார் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 10, 2026
அமமுக இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் (மார்ச், 11) திருச்சியில் NDA கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளும், பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் பங்கேற்க உள்ளார். ஆகையால் இராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட கழக செயலாளர் முருகன் Ex.MLA., அழைப்பு விடுத்துள்ளார்.
News March 10, 2026
இராமநாதபுரம்: ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தல்

இலங்கை கடல் வழியாக தமிழ்நாட்டிற்கு கடத்த முயன்ற 6 கிலோ 865 கிராம் தங்கக்கட்டிகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. மதங்கல் கடல் பகுதியில் சந்தேகப்படும்படி சென்ற மீன்பிடி படகை சோதனை செய்தபோது தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இலங்கையை சேர்ந்த இருவரை கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தோராய மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல்..!
News March 10, 2026
இராமநாதபுரம்: போலீஸ் சிக்கிய ரூ.300 கோடி பொருள்!

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.300 கோடி மதிப்புள்ள 248 கிலோ எடை கொண்ட போதைப் பொருளை கடத்த முயன்ற பாயாஸ்கான் மற்றும் இப்ராஹீம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து தீவிர விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.


