News January 20, 2025

அழுகிய நிலையில் போலீஸ்காரர் உடல் மீட்பு

image

மேலூர் அருகே அ.வல்லாளபட்டியை சேர்ந்தவர் நல்ல செழியன்(40). இவர் 3 வருடங்களுக்கு முன் பேரையூரில் பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது வீட்டில் 2 நாட்களுக்கு முன் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இன்று அருகில் உள்ளவர்கள் துர்நாற்றம் வீச, உள்ளே சென்று பார்த்த போது பாதி அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 7, 2026

மதுரை: ELECTION வந்தாச்சு! இதை தெரிஞ்சுக்கோங்க!

image

மதுரை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் voters.eci.gov.in/login <>என்ற<<>> இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

News April 7, 2026

மதுரை: கூட்டுப் பட்டாவை மாற்ற EASY ஆன வழி

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு <>க்ளிக் <<>>செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.

1.கூட்டு பட்டா,

2.விற்பனை சான்றிதழ்,

3.நில வரைபடம்,

4.சொத்து வரி ரசீது,

மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE

News April 7, 2026

BREAKING மதுரை: பழனிவேல் தியாகராஜன் வேட்பு மனு ஏற்பு

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல்வேறு கட்சியினரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு வருகின்றன. அதன்படி மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவரின் வேட்பு மனு ஏற்கப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!