News January 20, 2025
LSG கேப்டன் ஆனார் பண்ட்

லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்டை நியமித்து அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த மெகா ஏலத்தில் ₹27 கோடிக்கு அவரை LSG வாங்கியது. இதன்மூலம், 2025 ஐபிஎல் சீசனில் அதிக விலை மதிக்கத்தக்க வீரராக பண்ட் மாறினார். அடுத்த சில ஆண்டுகளில் தோனி, ரோஹித் ஷர்மாவுக்கு இணையான மதிப்பு கொண்டவராக பண்ட் மாறுவார் என LSG உரிமையாளா் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
ஒரு லிட்டர் ஆயில் கூட வெளியே வராது: ஈரான்

<<19342545>>எண்ணெய் கப்பல்களை தடுத்தால்<<>> கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்படி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்கள் தொடர்ந்தால் எதிரி நாடுகளின் கச்சா எண்ணெயை ஒரு லிட்டர் கூட வெளியே விடமாட்டோம் என்று ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே எண்ணெய் விலைகள் உயரும் என்று கவலையில் உள்ள நாடுகளை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
News March 10, 2026
BREAKING: கேஸ் சிலிண்டர்.. அரசு அவசர அறிவிப்பு

சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955-ஐ மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிலிண்டர்களை பதுக்குதல், கள்ளச்சந்தையில் விற்பனை செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படுவதோடு, கைது நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
News March 10, 2026
அதிமுகவில் இணைந்த மதிமுகவின் முக்கிய தலைவர்!

மதிமுக மாநில நிர்வாகி கோடையடி ராமசந்திரன், கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். மதிமுகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள விருதுநகரில் நடந்த இந்த மாற்றம் திமுக கூட்டணிக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேமுதிக நிர்வாகிகள் சிலரும் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் கசிந்துள்ளது.


