News January 20, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 47 பேர் போட்டி

image

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 47 பேர் களம் காண்கின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், திமுகவின் சந்திரகுமார், நாம் தமிழரின் சீதாலட்சுமி உட்பட 47 பேர் களத்தில் உள்ளனர். வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான இன்று மட்டும் அதிமுகவை சேர்ந்த செந்தில்முருகன் உட்பட 8 பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

Similar News

News March 10, 2026

சற்றுமுன்: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி (81) உடல்நலக்குறைவால் காலமானார். 1970 முதல் அசாமின் திப்பு லோக்சபா தொகுதியில் இருந்து 5 முறை MP-ஆக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சராக அவர் பதவி வகித்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News March 10, 2026

மீண்டும் திமுக கூட்டணியில் பஞ்சாயத்து

image

திமுக கூட்டணியில் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பிரச்னை வெடித்துள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு தற்போது 4 சீட் மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக கூறிவிட்டதாம். இதனையடுத்து, அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் நாளை நடைபெறும் என்று வைகோ சற்றுமுன் அறிவித்துள்ளார். அக்கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து, கடைசி நேரத்தில் கூட்டணி கூட மாறலாம் என கூறப்படுகிறது.

News March 10, 2026

விவசாயிகளுக்கு 80% மானியம் தரும் அரசு திட்டம்

image

விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் வாங்க SMAM Subsidy Scheme மூலம் மத்திய அரசு 40% – 80% வரை மானியம் வழங்குகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகும் போது www.agrimachinery.nic.in -ல் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் மாநில வேளாண்மைத் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும் & சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தகுதி பெற்றால் Mobile No.-க்கு SMS வரும். SHARE.

error: Content is protected !!