News January 20, 2025

10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை

image

தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று பிள்ளைகளுக்கு சொல்லி சொல்லி வளர்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு வந்திருக்கிறது. இப்படியெல்லாம் நடக்குமா என்று நாம் நம்ப முடியாத ஒரு சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது. உடையாம்பாளையத்தில் 5ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி அக்‌ஷயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கான காரணம் கூட பெற்றோருக்கு தெரியவில்லை. உஷாராக இருங்கள் பெற்றோர்களே..

Similar News

News April 6, 2026

நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்

image

நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை RBI வகுத்துள்ளது. இனி நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதற்குமுன் 85% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியை சந்திக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடன் பெறுபவர்கள் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பிப்பது இனி கட்டாயம்.

News April 6, 2026

KKR Vs PBKS ஆட்டம் மழையால் பாதிப்பு

image

KKR, PBKS அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையின் குறுக்கீடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3.4 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை KKR எடுத்துள்ளது. ஃபின் ஆலன், கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்களை சேவியர் பார்ட்லெட் வீழ்த்தினார். 8 மணிக்கு 90% மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியிருந்தது. எனவே, போட்டி தொடங்குமா என உறுதியாக தெரியவில்லை.

News April 6, 2026

சர்ச்சைகளுக்கு அஸ்வத்தாமன் முற்றுப்புள்ளி

image

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பண்ருட்டி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அஸ்வத்தாமனும் பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் மோகனின் வெற்றிக்கு பாடுபடுவேன் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!