News January 20, 2025
திருச்சியில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: ரவுடி கைது

திருச்சி பொன்மலைப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தங்கமணி என்கிற டேஞ்சா் மணி. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் சில நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் இருந்த தங்கமணி, அவர்களது வீட்டு வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளார். புகாரின் பேரில் போலீசார் நேற்று தங்கமணியை கைது செய்தனர்.
Similar News
News August 13, 2025
திருச்சி: ரூ.30,000சம்பளத்தில் Government வேலை!

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உட்பட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கலாம். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ஆம் தேதிக்குள் இங்கே <
News August 13, 2025
திருச்சி: லஞ்சம் வாங்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் முறையாக அனுமதி பெற்று கட்டிய வீட்டிற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.6,500 லஞ்சம் பெற்ற வழக்கில், முன்னாள் வருவாய் உதவியாளர் சுபேர்அலி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணையின் முடிவில், முன்னாள் வருவாய் உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News August 13, 2025
திருச்சி: அஞ்சல் ஊழியரிடம் தவறாக நடந்த காவலர் சிறையில் அடைப்பு

திருச்சி, பொன்மலையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 25 வயது பெண் ஊழியர் 08.08.25 அன்று டூவீலரில் வேலைக்கு சென்றபோது மர்ம நபர் ஒருவர் வழிமறித்து மானபங்கம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காணக்கிளியநல்லூர் காவல் நிலைய 2ஆம் நிலை காவலர் கோபாலகிருஷ்ணனை (32) கைது செய்து சிறையில் அடைத்தனர்.