News January 20, 2025
பழனியில் பக்தர்கள் அவதி

பழனி பாதயாத்திரை பக்தர்கள் இரண்டு நாட்களாக விட்டுவிட்டு பெய்யும் மழை மற்றும் பனிப்பொழிவால் சிரமப்படுகின்றனர். சூரிய வெளிச்சம் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளிக்கிறது. நாள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையுள்ளது. இதனால் அதிகாலை நடப்பதை வழக்கமாக கொண்டுள்ள பக்தர்கள் நேரத்தை மாற்றியுள்ளனர். காலை 10:00 மணிக்கு மணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 20, 2025
திண்டுக்கல்லில் அனுமதிக்கப்பட்ட இடங்கள்!

திண்டுக்கல்லில் விநாயகர் சிலை கரைக்க அனுமதிக்கப்பட்ட இடங்கள்:
▶️கோட்டைக்குளம்
▶️நத்தம்: அம்மன் குளம்
▶️வத்தலகுண்டு: கண்ணாப்பட்டி ஆறு
▶️நிலக்கோட்டை: அணைப்பட்டி வைகை ஆறு
▶️பழனி: சண்முகநதி,
▶️ஒட்டன்சத்திரம்: தலைக்குத்து அருவி
▶️கொடைக்கானல்: டோபிகானல்
▶️வேடசந்தூர்: குடகனாறு
▶️வடமதுரை: நரிப்பாறை
▶️குஜிலியம்பாறை: பங்காளமேடு குளம்
▶️சின்னாளப்பட்டி: தொம்மன்குளம்
▶️தாடிக்கொம்பு: குடகனாறு (SHARE)
News August 20, 2025
ஒட்டன்சத்திரம் போக்சோ வழக்கு சிறை மற்றும் அபராதம்!

ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த தின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி(58) என்பவரை ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செல்லப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் இன்று விதித்தனர்.
News August 20, 2025
தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

தனியார்,அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், குஜிலியம்பாறை தொழில்பயிற்சி நிலையத்துக்கு (கரிக்காலிப் பிரிவு) நேரில் சென்று சோ்க்கை மேற்கொள்ளலாம். விவரங்களுக்கு குஜிலியம்பாறை அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலும், 99943 09861, 96008 27733 கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.