News January 19, 2025
மாசாணி அம்மன் கோவிலில் ரஷ்ய நாட்டினர் தரிசனம்

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டின் கலாச்சாரக் குழுவினரை அறங்காவலர் குழுத்தலைவர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார். இதில் பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்பிரமணியம், நேரு கல்வி குழும இயக்குனர் முரளிதரன், இந்தியா ரஷ்யா கலாச்சார நட்புறவு மையத்தின் தலைவர் தங்கப்பன், தொழிலதிபர் கணேஷ், அறங்காவலர் மஞ்சுளா தேவி ஆகியோர் உடனிருந்தனர்.
Similar News
News March 7, 2026
BREAKING: கோவையை உலுக்கிய கொடூரம்.. வந்தது தீர்ப்பு!

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இதுதொடர்பாக கடந்த 4 மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று 3 பேருக்கும் சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News March 7, 2026
BREAKING: கோவை கூட்டு வன்கொடுமை வெளியான தீர்ப்பு!

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
News March 7, 2026
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பழங்குடியின மாணவன் சாதனை.

ஆண்டுதோறும் ரூ.1000 விதம் 4 ஆண்டுகளுக்கு வழங்க நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வு தேர்வு கடந்த டிச.25ல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் நாக பிரசாந்த் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


