News January 19, 2025

ஈரோடு நாதக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் முறையாக முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டதற்காக, வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் மீது BNS 171 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாதக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Similar News

News March 8, 2026

அன்புமணியை அதிரவிடும் ராமதாஸின் NDA கணக்கு!

image

NDA கூட்டணியில் இணைந்த அன்புமணிக்கு போட்டியாக திமுக கூட்டணியுடன் செல்ல நினைத்த ராமதாஸுக்கு விசிக செக் வைத்து தடுத்துவிட்டது. இதையடுத்து <<19303393>>தவெகவுடன் கூட்டணி என பேசப்படும் நிலையில்<<>>, பதறிப்போய் பாஜக தரப்பு ராமதாஸை தங்கள் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்நிலையில் 5 சீட் + மாம்பழம் சின்னம் என்ற நிபந்தனையுடன் பேசி வருவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News March 8, 2026

தங்கம் விலை இந்த வாரத்தில் ₹5,800 குறைந்தது!

image

தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடும் உயர்வைக் கண்டாலும், வர்த்தக ரீதியாக வார இறுதியில் சவரனுக்கு ₹5,800 சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மார்ச் 1-ம் தேதி ₹1,26,200-க்கு விற்பனையான தங்கம், தற்போது ₹1,20,400-க்கு விற்பனையாகிறது. அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கமின்றி இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 8, 2026

அரசியலில் விசுவாசம் குறைந்துவிட்டது: நேரு

image

அரசியலில் இப்போது விசுவாசம் குறைந்துவிட்டதாக அமைச்சர் KN.நேரு கூறியுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது. தஞ்சாவூரில், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி நினைவு மண்டப திறப்பு விழாவில் பேசிய அவர், அந்த கால அரசியல்வாதிகள் முன்பு உள்ளதை நினைத்து பார்க்கக் கூடியவர்கள் என்றார். அண்மை காலமாக பலர் திமுகவில் இணைவதை விரும்பாத நேரு, விசுவாசம் குறித்து பேசினாரா? என SM-ல் விவாதம் எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!