News January 19, 2025
ஈரோடு நாதக வேட்பாளர் மீது வழக்குப் பதிவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் முறையாக முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டதற்காக, வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் மீது BNS 171 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாதக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Similar News
News August 25, 2025
தங்கம் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனிங்க..!

உலகிலேயே தங்கம் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தங்கத்தின் விலை கூடினாலும் அதன் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், நீங்கள் தங்கம் வாங்கும்போது இந்த விசயங்களை மறக்காம நோட் பண்ணுங்க. *BIS முத்திரையை கட்டாயம் பாருங்க. முக்கோண வடிவிலான இந்த முத்திரை இருந்தால் அது தரமான தங்கம். *Hallmark Unique Identification (HUID) கோடு, *<
News August 25, 2025
இந்தியாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

கஜகஸ்தானில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கம் கிடைத்துள்ளது. மகளிர் ட்ராப் ஷூட்டிங் இறுதிப்போட்டியில் நீரு தண்டா 43 முறை இலக்கை துல்லியமாக சுட்டு தங்க பதக்கத்தை வசப்படுத்தினார். இதே போட்டியில் இந்தியாவின் ஆஷிமா வெண்கலம் வென்றார். இதுவரை இந்தியா 28 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களுடன் முதலிடத்தில் தொடர்கிறது.
News August 25, 2025
கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்

கரூரில் கட்சியில் இருந்து கூண்டோடு விலகியது தேமுதிகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட செயலாளர் <<17504956>>அரவை முத்து<<>>, அதிமுகவில் இணைந்த நிலையில், அவரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைந்துள்ளனர். மாவட்ட அவை தலைவர் ரங்கநாதன், குளித்தலை நகரச் செயலாளர் சுப்பிரமணியன், அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சின்னசாமி, கடவூர் ஒன்றிய செயலாளர் ஆல்வின் உள்ளிட்ட 200 பேர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனர்.