News January 19, 2025
பெண் டாக்டர் கொலை…மகனை தூக்கிலிட சொல்லும் தாய்

கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்தது. இதுபற்றி சஞ்சய் ராயின் தாய் மாலதி(70) கூறுகையில், எனக்கும் 3 மகள்கள் இருக்கின்றனர். அந்த டாக்டரின் தாயின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். குற்றவாளியான என் மகனை மன்னிக்கவே மாட்டேன், அவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தால் ஆட்சேபிக்க மாட்டேன் என்றார்.
Similar News
News August 25, 2025
பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 12-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய வழியில், மாணவன் நல்லமுத்து மயங்கி விழுந்துள்ளான். அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், நல்லமுத்து உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News August 25, 2025
கூலிக்கு U/A சான்று… கிடைக்குமா ? கிடைக்காதா ?

கூலி படத்திற்கு U/A சான்று கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. Madras HC-ல் நடந்த விசாரணையில் படங்களுக்கு சான்று வழங்கும் போது சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து அணுக வேண்டும் எனவும் வன்முறையை ஊக்குவிப்பது தங்கள் நோக்கமல்ல எனவும் படக்குழு தரப்பு வாதிட்டது. இதற்கு சென்சார் போர்டு தரப்பு கூலியில் கொடூர கொலை, அதிக வன்முறை இருந்ததால் A சான்று தரப்பட்டதாக தெரிவித்தது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 25, 2025
நாளை பள்ளி மாணவர்களுக்கு.. முக்கிய அறிவிப்பு

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி மறுகூட்டல் (Re-total), மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது. மார்க்கில் மாற்றம் இருக்கும் தேர்வர்களின் பட்டியல் நாளை(ஆக.26) பிற்பகலில் வெளியாகவுள்ளது. மாற்றம் இல்லாதவர்களின் பதிவெண்கள் பட்டியலில் இடம்பெறாதாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் Notification பகுதியில் புதிய மார்க்கை அறியலாம். All the best மாணவர்களே