News January 19, 2025
மது போதையில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

மன்னார்குடி அருகே உள்ள பாமனியை சேர்ந்தவர் ராஜேஷ். அதே பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன், இருவரும் பங்காளிகள். இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி மாலை ராஜேஷ் வீட்டு வாசலில் மது போதையில் நின்று கொண்டிருந்த பொழுது, மது போதையில் இருந்த அறிவழகன் தகாத வார்த்தைகளால் பேசி, கத்தியால் குத்தி மிரட்டியதாக அறிவழகன் மீது வழக்கு பதிவு செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 16, 2025
திருவாரூர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் விவரங்கள்

பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து வழங்கிடும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) மன்னார்குடி சிட்டி ஹால், திருக்காரவாசல் ஆலயா திருமண மண்டபம், திருராமேஸ்வரம் மஞ்சனவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, விஜயபுரம் முஸ்லீம் ஊர் உறவின்முறை ஜமாத் கட்டிடம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. SHARE
News September 16, 2025
திருவாரூர்: கணவன்-மனைவி தற்கொலை

திருவாரூர், சரபோஜிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜு-மல்லிகா தம்பதியினர். இவர்களது கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களது உறவினர்களிடம் தகவல் கூறினர். இதையடுத்து வீட்டை திறந்து பார்த்த போது, கணவன்-மனைவி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேரளம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News September 15, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.