News January 19, 2025
TN காவல்துறையை பங்கம் செய்த வேங்கைவயல் மக்கள்

2 ஆண்டுகளைக் கடந்தும் வேங்கைவயல் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்கள் CBCID தூங்குவதாக விமர்சித்து பேனர் வைத்துள்ளனர். 2022 டிசம்பரில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது. இந்நிலையில், “இவ்வழக்கை தொடர்ந்து 100 ஆண்டுகள் விசாரணை நடத்த வாழ்த்துகிறோம்” என வடிவேலு போட்டோவுடன் விமர்சித்துள்ளனர். உங்க கமெண்ட் என்ன?
Similar News
News March 11, 2026
CM ஸ்டாலினின் கூட்டத்தில் 2 பேர் மரணம்

திருச்சியில், நேற்று முன்தினம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் 2 பேர் மரணமடைந்தனர். புதுக்கோட்டை, மங்களநாட்டை சேர்ந்த ஜெயராமன்(67) மாநாட்டு திடலில் அமர்ந்திருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல், பெரம்பலூரை சேர்ந்த சரோஜா(61) மாநாட்டு மைதான வாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்விவகாரத்தை திமுக திட்டமிட்டு மறைத்துவிட்டதாக பாஜக, தவெகவினர் SM-ல் விமர்சித்து வருகின்றனர்.
News March 11, 2026
வீட்டு சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல்

வளைகுடா போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் வணிக சிலிண்டர் புக்கிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் புக்கிங்கிலும் சிக்கல் எழுந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் மூலம் சிலிண்டர் புக் செய்ய முயன்றால், ‘சுவிட்ச் ஆப்’ என பதில் வருவதாக வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். உங்கள் பகுதியில் இதுபோன்ற பிரச்னை இருக்கிறதா?
News March 11, 2026
இதனால் தான் சுதீஷுக்கு MP சீட் கொடுத்தாரா பிரேமலதா?

திமுக கொடுத்த MP சீட்டை முதலில் மூத்த நிர்வாகி ஒருவருக்கு கொடுக்கலாம் என தேமுதிக பிளான் செய்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சி மீதான நன்மதிப்பு கூடும் என பிரேமலதா கணக்கு போட்டாராம். ஆனால் குறுக்கே வந்த சுதீஷ் இத்தனை நாள் கட்சிக்காக உழைத்த தனக்கு MP சீட்டை வழங்கவில்லை எனில் கட்சியை விட்டே விலகுவேன் என முறையிட்டதாக பேசப்படுகிறது. இதனாலேயே அவருக்கு அந்த MP சீட் கொடுக்கப்பட்டது என்கின்றனர்.


